ஆப்கானிஸ்தானை தலைமையிடமாக கொண்டு உலகெங்கும் வன்முறை மற்றும் தீவிரவாதத்தை ஏற்படுத்தி வரும் தீவிரவாத இயக்கமான அல்கொய்தா தனது கிளையை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்தியா மீது அல்கொய்தா புனித போரை தொடங்கும் என்றும் சமீபத்தில் சமூக வலைத்தளம் ஒன்றில் அல்கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாகிரி பேசிய வீடியோ உலகம் முழுவதும் வெளியானது. இந்த தகவல் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த மிரட்டலை தொடர்ந்து மத்திய அரசு நேற்று அதிகாரிகள் மட்டட்த்திலான அவசர ஆலோசனை ஒன்றை நடத்தியது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விமானப்படை தளபதி அருப் ரஹா அவர்கள் கூறும்போது, ‘‘அல்கொய்தா போன்ற தீவிரவாத இயக்கங்கள் இதுபோன்ற மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்து இருக்கிறது. ஆனால் இந்தியா இதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது’’ என்றார். மேலும் அவர் முழு அளவிலான இந்திய விமானப்படை தளங்கள் 4 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளது.
சத்தீஷ்கார் மாநிலத்தில் ராய்ப்பூர், மராட்டிய மாநிலத்தில் ஒஜ்ஹார், ஜம்மு–காஷ்மீர் மாநிலத்தில் கார்கில், நியோமா ஆகிய இடங்களில் இவை அமைக்கப்படுகின்றன. தற்போது இந்தியா மிகவும் வலிமையானதாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது. அல்கொய்தா தீவிரவாத இயக்கம் புனிதப்போரை தொடங்கினால் அதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று அவர் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.