அற்புதம்மாளின் கருத்து குறித்து கவலைப்பட வில்லை – திருநாவுக்கரசர்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 28 வருடங்களாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்காக பல்வேறு அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் 7 பேர் விடுதலைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்ட போதிலும் கவர்னர் இன்னும் இவர்கள் விடுதலை குறித்து முடிவெடுக்காமல் உள்ளனர். மேலும் 7 பேர் விடுதலைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது.மேலும் பேரறிவாளன் விடுதலைக்கு திருநாவுக்கரசர் மட்டும் எதிர்ப்பது ஏன் என்றும் அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த திருநாவுக்கரசர், ‘ஒரு தாய் என்ற முறையிலேயே பேரறிவாளனின் தாயார் தன்னை விமர்சித்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னயில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர் அற்புதம்மாளின் கருத்து குறித்து தான் கவலைப்பட வில்லை என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.