அரியலூரை அடுத்து மேலும் ஒரு மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

அரியலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் ரத்னா அவர்கள் சற்று முன் அறிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

அதேபோல் அரியலூரை அடுத்து திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களும் அறிவித்துள்ளார். எனவே இன்று அரியலூர், திருச்சி ஆகிய இரண்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை என்பது உறுதியாகியுள்ளது

சென்னையில் நேற்றிரவு நல்ல மழை பெய்தாலும் தற்போது மழை இல்லை என்பதால் இன்று விடுமுறை இருக்க வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது

Leave a Reply