shadow

அராஜக செயல்களை திமுக அனுமதிக்காது: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

கடந்த சில மாதங்களாகவே பொதுமக்கள், வணிகர்களை திமுகவினர் தாக்கி வருவதும், இதுகுறித்து வெளிவரும் வீடியோவால் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு வருவதும் தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக சமீபத்தில் அழகு நிலைய பெண் ஒருவரை திமுகவின் முன்னாள் கவுன்சிலர் கண்மூடித்தனமான தாக்கிய வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சி தொண்டர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தனிநபரை விட கழகமே உயர்ந்தது என்ற உணர்வின்றி செயல்படுபவர்களையும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பெண்களிடம் வரம்பு மீறி ரவுடித்தனமான செயல்களில் ஈடுபடுவோர் என – யாராக இருந்தாலும் கழக விதிகளின்படி கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுக்கிறேன்!

கழகத்திற்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில், பெரம்பலூரில் பெண்மணி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியவர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். தனிப்பட்ட பிரச்சினைகள் – விருப்பு வெறுப்புகளைக் கொண்டு இதுபோன்ற அராஜக செயல்களில் ஈடுபடுபவர்களை தி.மு.கழகம் அனுமதிக்காது!

Leave a Reply