அரசு, தனியார் பள்ளிகள் காலவரையற்ற விடுமுறை: அரசு அறிவிப்பால் பெரும் பரபரப்பு
கடந்த 2 மாதங்களுக்கும் மேல் டெல்லி உள்பட இந்தியா முழுவதும் சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வரும் நிலையில் நேற்று டெல்லியில் ஷாகின்பாக் என்ற பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் திடீரென கலவரம் ஏற்பட்டதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது
இந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகி உள்ளனர். போராட்டக்காரர்களில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாகவும் இதில் ரத்தன்பாலா என்ற போலீஸ்காரர் பலியானதாகவும் மூன்று உயரதிகாரிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
இதனை அடுத்து டெல்லியில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதாகவும் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு டெல்லிக்கு வந்திருக்கும் நிலையில் சிஏஏ போராட்டத்தால் கலவரம் ஏற்பட்டு உள்ளது மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.