அரசியல் செய்வதற்கு இது நேரமில்லை: திமுக தலைவர் ஸ்டாலின்
அரசியல் செய்வதற்கு இது நேரமில்லை என்றும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் தற்கொலையை உடனே தடுக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் பிரதமரை சந்திக்க டெல்லி செல்வதற்கு முன்பு பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகள், மீனவர்களை முதல்வர் நேரடியாக சந்தித்து ஆலோசித்திருக்க வேண்டாமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல் தமிழக அரசு கோரிய நிதியை போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.