அரசியல் கட்சிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை: தேர்தல் ஆணையர்

நாங்குநேரியில் மின்னணு வாக்குஇயந்திரம் மாற்றியது குறித்து அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியதோடு இதுகுறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் நாங்குநேரியில் மின்னணு வாக்குஇயந்திரம் மாற்றியது குறித்து ஆட்சியர் அறிக்கை அளித்துள்ளதாகவும், மாற்றப்பட்ட இயந்திரம் வாக்குபதிவிற்கானது அல்ல என்றும், பயிற்சிக்கான இயந்திரங்கள் தான் என்றும் கூறியுள்ளார்.

மேலும் பயிற்சிக்கான மின்னணு இயந்திரங்கள் மாற்றம் குறித்து அரசியல் கட்சிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply