அரசியல்தான் பேசினோம்: விஜயகாந்த் சந்திப்புக்கு பின் திருநாவுக்கரசர் பேட்டி
அதிமுக-தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில் சற்றுமுன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார்.
விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரிக்கவே திருநாவுக்கரசர் அவரது வீட்டிற்கு சென்றார் என்று கூறப்பட்டாலும் தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அழைத்து வரவே அவர் சென்றதாக கூறப்பட்டது
இந்த நிலையில் விஜயகாந்தும் நானும் இருவருமே அரசியல்வாதிகள்தான்.. எனவே தேர்தல் குறித்தும் கூட்டணி குறித்தும் பேசியது உண்மைதான். அரசியல் பேசவில்லை என்று சொன்னால் அது பொய்யாகாதா? என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். மேலும் கூட்டணி குறித்து நல்ல முடிவு எடுக்க வேண்டுமென்ற அபிப்ராயத்தை விஜயகாந்த்திடம் கூறியதாக திருநாவுக்கரசர் கூறினார்.
இந்த நிலையில் திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் ஐந்து மக்களவை தொகுதியும் ஒரு மாநிலங்களவை தொகுதியும் தேமுதிகவுக்கு தர திமுக ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.