shadow

அரசியலில் நுழையும் மாயாவதியின் வாரிசு!

இந்திய அரசியலில் அரசியல்வாதிகளின் வாரிசுகள் பலர் அரசியலில் நுழைந்துள்ள நிலையில் உபி மாநிலத்தில் மாயாவதியின் வாரிசும் தற்போது அரசியலில் நுழையவுள்ளார்

மாயாவதியின் அண்ணன் மகன் ஆகாஷை பகுஜன் சமாஜ் கட்சியில் இணைக்கப்போவதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கட்சியின் மூத்த தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம், கட்சி துணைத் தலைவர் பதவியிலிருந்து தனது அண்ணனை மாயாவதி நீக்கி நிலையில் தற்போது பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அண்ணன் மகனை கட்சியில் இணைக்க போவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது. சமீபத்தில் மாயாவதியின் பிறந்த நாளன்று, அவருடன் ஆகாஷ் நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை கிளப்பிய நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply