அம்மாவும் மகளும் அண்ணன் தம்பியை திருமணம் செய்த கொடுமை!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு அம்மாவும் மகளும், அண்ணன் தம்பியைத் திருமணம் செய்த கொடுமை நடந்துள்ளதை அப்பகுதியில் உள்ளவர்கள் கண்டித்து வருகின்றனர்

பஞ்சாப் மாநிலத்தில் 35 வயது பெண் ஒருவர் தனது மகளுக்கு ஒரு வாலிபரை திருமணம் செய்து வைத்தார். இந்த திருமணம் நடந்த சில நாட்களில் தனது மருமகனின் அண்ணனுடன் நெருக்கமாக அவர் பழகியுள்ளார். இந்த நெருக்கமான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதையடுத்து இருவரும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து குடும்பம் நடத்தி உள்ளனர்
இந்த விஷயம் ஒருநாள் மகளுக்கும் மருமகனுக்கும் தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து இருவரையும் அழைத்து குடும்பத்தினர் பேசி இது முறையற்ற திருமணம், இந்த திருமணம் வேண்டாம் இருவரும் பிரிந்து விடுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளனர்

ஆனால் இருவரும் தங்களது காதல் புனிதமானது என்றும், பிரிய மாட்டோம் என்று கூறியதை அடுத்து உறவினர்கள் மிரட்டி உள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்து நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது

Leave a Reply