shadow
அம்பேத்காரும் மோடியும் பிராமணர்கள்: குஜராத் சபாநாயகர் சர்ச்சை பேச்சு
பாஜகவை சேர்ந்த தலைவர்கள் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி நெட்டிசன்களிடம் வாங்கி கட்டி கொள்வதை கடந்த நான்கு ஆண்டுகளாக வழக்கமாக கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று அம்பேத்கரும், பிரதமர் மோடியும் பிராமணர்களே என குஜராத் சட்டசபை சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி கூறி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
குஜராத் சட்டசபை கூட்டத்தின் போது பேசிய சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி, ‘அம்பேத்கரை பிராமணர் என்பதில் எனக்கு தயக்கம் இல்லை. அம்பேத்கரின் முதற்பெயரான பாபாசாகேப் அவருடைய ஆசிரியரின் பெயராகும். அறிவார்ந்த எல்லாரும் பிராமணர்கள் என்பதால் அம்பேத்கர், ஏன் பிரதமர் மோடி கூட பிராமணர் தான்” என அவர் பேசியுள்ளார்.
ராஜேந்திர திரிவேதியின் இந்த பேச்சுக்கு அம்மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சபாநாயகர் பொறுப்பில் இருந்து கொண்டு பொறுப்பற்ற முறையில் பேசக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன

Leave a Reply