அம்பேத்கர், பெரியார் கொள்கைகள் தற்காலத்துக்கு ஏற்றது அல்ல: டாக்டர் கிருஷ்ணசாமி
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அரியலூர் அனிதா மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதால் அவருக்கு ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகிறது,.
இந்த நிலையில் அம்பேத்கர், பெரியார் கொள்கைகள் அந்த காலத்தை போல் தற்போது ஏற்றதாக இல்லை என டெல்லியில் பேட்டி ஒன்றில் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். அவருடைய இந்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
பெரியாரின் கொள்கைகளை தமிழர்கள் கடைபிடித்து வருவதாலதான் ஜாதி பெயரை பெயருக்கு பின்னால் போடும் பழக்கம் தமிழகத்தில் ஒழிந்துள்ளது. இந்த நிலையில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது கண்டனத்துக்குரியது என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.