shadow

அமைதிப்பேரணி வெற்றி: தயாநிதி அழகிரி அறிவிப்பு

மு.க.அழகிரி தலைமையிலான அமைதிப்பேரணி வெற்றி பெற்றதாக அழகிரியின் மகன் துரை தயாநிதி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

கருணாநிதியின் 30வது நாள் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெறும் அமைதி பேரணியில் மு.க.அழகிரி கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றதாகவும், சென்னை திருவல்லிக்கேணியில் இருந்து கலைஞரின் நினைவிடத்தை நோக்கி சென்ற மு.க.அழகிரியின் அமைதி ஊர்வலம் மாபெரும் வெற்றி பெற்றதாகவும் தயாநிதி அழகிரி கூறியுள்ளார்.

மேலும் மக்கள் கடலுக்கு இடையே, வங்கக் கடலை நோக்கி, தலைவரை வணங்க சென்றா மு.க.அழகிரியின் அமைதி ஊர்வலத்திற்கு சில தடைகள் ஏற்பட்ட போதிலும் வெற்றிகரமாக சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply