அமைதிப்பேரணியில் ஒரு லட்சம் பேர்: மு.க.அழகிரி அறிவிப்பு
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின்னர், அவரது மகனும் முன்னாள் மத்திய மந்திரியுமான மு.க அழகிரி தீவிர அரசியலில் ஈடுபட முடிவெடுத்துள்ள நிலையில் அவர் மீண்டும் திமுகவில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை திமுகவில் சேர்க்கும் எண்ணம் ஸ்டாலினுக்கு இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது
இந்த நிலையில் வரும் செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் கருணாநிதி சமாதியை நோக்கி அமைதி பேரணி நடத்தப்படும் என மு.க.அழகிரி அறிவித்துள்ளார். இதனால் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அழகிரி கூறியதாவது, “தற்போது திமுகவில் என்னை இணைப்பதாக தெரியவில்லை. நேரம் வரும் போது எனது ஆதங்கத்தை தெரிவிப்பேன். செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் கருணாநிதி சமாதியை நோக்கி செல்லும் பேரணியில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள். பேரணிக்கு பின்னர் எனது முடிவை தெரிவிப்பேன்” என அவர் தெரிவித்தார்
Leave a Reply
You must be logged in to post a comment.