வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி சற்றுமுன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72
அக்டோபர் 13-ம் தேதியன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் அக்டோபர் 14-ம் தேதியன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அமைச்சர் துரைக்கண்ணு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் காலமாகிவிட்டார்.
அமைச்சர் துரைக்கண்ணுவின் மரணம் அதிமுகவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. சென்னையில் அமைச்சர் துரைக்கண்ணு உடலுக்கு முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி செலுத்திய பின் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும்.
Leave a Reply
You must be logged in to post a comment.