shadow

அமைச்சர் செல்லூர் ராஜூ-மு.க.அழகிரி சந்திப்பு

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் மீண்டும் திமுகவில் இணைய மு.க.அழகிரி முயற்சித்து வரும் நிலையில் இன்று மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூவுடன், மு.க.அழகிரி திடீர் சந்திப்பு நடந்துள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே அழகிரியின் அமைதி பேரணியை அதிமுக அமைச்சர்கள் பாராட்டி வந்தனர். இந்த நிலையில் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமா? அல்லது அதிமுகவில் சேர அழகிரி முடிவா? என்ற சந்தேகம் அரசியல் விமர்சகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஆனால் சமீபத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் தாயார் மறைந்ததற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அழகிரி அவரை சந்தித்ததாகவும் இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் இருவரும் பேசவில்லை என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply