அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி திடீர் டெல்லி பயணம் ஏன்?
தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இன்று திடீரென டெல்லிக்கு பயணம் செய்துள்ளனர். இந்தா இரு அமைச்சர்களும் நாளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க உள்ளதாகவும், நாளை மறுநாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை சந்திக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த சந்திப்பு அரசியல்ரீதியிலான சந்திப்பாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி ஏற்படும் என்ற நிலையில் இதுகுறித்து ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் கஜா புயல் பாதிப்புக்கு இழப்பீடு கேட்கவே அமைச்சர்கள் டெல்லி சென்றுள்ளதாகவும் இந்த சந்திப்பில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என்றும் தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன
Leave a Reply
You must be logged in to post a comment.