அமைச்சரை சமூக வலைத்தளத்தில் விமர்சித்த நபர் அதிரடி கைது
போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது, சமூக வலைதளத்தில் தவறாக கருத்து தெரிவித் கரூரை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கல்குவாரி உரிமையாளர்களுக்கும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கும் தொடர்பு இருப்பதாக ஆனந்தகுமார் என்பவர் தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இதுகுறித்து கண்ணன் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஆனந்தகுமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சமூக வலைத்தளத்தில் கருத்து சொல்வது கருத்து சுதந்திரம் என்றும் அதனை நசுக்க அரசு முயற்சி செய்ய கூடாது என்றும் சமூகவலைத்தள பயனாளிகள் இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.