அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு
ஆன்லைன் மூலம் பெருமளவு வர்த்தகம் செய்யும் அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதன்படி அமேசான், பிளிப்கார்ட் போன்றவை தங்கள் நிறுவனப் பொருட்களை விற்பது தடை செய்யப்படுகிறது. மேலும் சில முன்னணி நிறுவனங்களுடன் கூட்டு வைத்துக்கொண்டு அவர்களின் ஏதேனும் ஒரு பொருளை தங்கள் இணையதளம் மூலம் பிரத்யேகமாக விற்பதும் தடுக்கப்படுகிறது.
அதேபோல் எந்த ஒரு நிறுவனமும் தங்களது பொருட்களை 25 விழுக்காட்டிற்கு மேல் ஒரு குறிப்பிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனம் மூலம் விற்கக் கூடாது என்றும் விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. மேலும் கேஷ்பேக் எனப்படும் ஒரு குறிப்பிட்ட தொகையை பொருள் வாங்கும் வாடிக்கையாளருக்கு திருப்பி அளிக்க வேண்டும். அதற்கான நடைமுறையை பாகுபாடு இன்றி வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றன என ஆண்டுதோறும் ஆடிட்டர் மூலம் ரிசர்வ் வங்கிக்கு அறிக்கை அளிக்கவும் பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
உள்நாட்டு வியாபாரிகளின் வர்த்தகங்களை பாதுகாக்கவே மத்திய அரசு இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும் இந்த கட்டுப்பாடுகள் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி அமலுக்கு வருகின்றன என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.