அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு: 8 மாணவர்கள் படுகாயம்

அமெரிக்காவில் பள்ளி மாணவர்களிடையே துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருவது கடந்த சில ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில் இன்று அமெரிக்காவில் பள்ளி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள டென்வர் என்ற புறநகர் பகுதியில் ஸ்டீம் ஸ்கூல் ஹைலேண்ட் ரான்ச் என்ற பள்ளியில் நேற்று மதியம் 2 மணியளவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த 8 மாணவர்கள் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.

இந்த துப்பாக்கி சூடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட இருவரும் அந்த பள்ளியின் மாணவர்கள் என்பதும், அவர்களில் ஒருவன் 15 வயதுக்கும் குறைவான சிறுவன் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Leave a Reply