அமெரிக்க தூதரகம் மீண்டும் தாக்குதல் நடத்திய ஈராக்: உலகப்போர் மூளும் அபாயம்?

சமீபத்தில் ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் போர் நிலைகளில் ஈராக் இராணுவம் குண்டு வீசி பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட நிலையில் அமெரிக்கா மற்றும் ஈராக் ஆகிய இரு நாடுகளிடையே பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து ராக்கெட்டுகள் மூலம் ஈராக் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இதுகுறித்து அமெரிக்க ராணுவம் கூறியபோது தங்களது தூதரகத்தின் மிக அருகே ராக்கெட்டுகள் எழுந்துள்ளதாகவும் இருப்பினும் தூதரகத்துக்குள் தூரத்திலுள்ள அதிகாரிகளுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது

இருப்பினும் இந்த தாக்குதலை கண்டித்த அமெரிக்க அரசு தொடர்ந்து இதுபோல் தாக்குதலில் ஈடுபட்டு வந்தால் ஈராக் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை வரும் என எச்சரித்துள்ளது. அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் ஈராக் தாக்குதல் நடத்தியுள்ளதால் உலக போர் மூளும் அபாயம் இருப்பதாகவும் உலகநாடுகள் அச்சம் கொண்டிருக்கின்றன

Leave a Reply