அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜராகவில்லை: என்ன ஆச்சு சம்மன்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து கடந்த சில மாதங்களாக விசாரணை செய்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் இன்று ஆஜராகவில்லை

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்காக 9 மருத்துவர்கள் இன்று ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் சம்மனுக்காக அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜராகாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஏற்கனவே ஆறுமுகசாமி ஆணையத்திற்கும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கும் இடையே சில நாட்களுக்கு முன் கருத்து மோதல்கள் ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply