அப்படித்தான் பண்ணுவோம்: ராணுவமே வந்தாலும் எங்களை ஒண்ணும் செய்ய முடியாது: விஜய் ரசிகர்கள்

விஜய் நடித்த பிகில் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில் விஜய்யின் தீவிர ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து ரசித்து வருகின்றனர்

இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் விஜய் ரசிகர்கள் வன்முறையில் இறங்கியதால் அங்கு வாகனங்கள் உடைக்கப்பட்டும் பேனர்கள் கிழிக்கப்பட்டும் ஒரே ரணகளம் ஆகி உள்ளது. இதனால் போலீசார் விஜய் ரசிகர்கள் 30 பேரை கைது செய்துள்ளனர்

இந்த நிலையில் சென்னை திரையரங்கம் ஒன்றில் ஆர்வக்கோளாறில் பேட்டி அளித்த விஜய் ரசிகர் ஒருவர் ’தளபதி திரைப்படம் வெளியாகும்போது அப்படித்தான் செய்வோம் என்றும் போலீஸ் அல்ல, ராணுவம் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்றும் ஏனென்றால் விஜய் ரசிகர்கள் அந்த அளவுக்கு கெத்து என்றும் கூறியுள்ளார்

ஒரு திரைப்படம் வெளியாகும்போது அந்த திரைப்படத்தை அமைதியாக பார்த்து ரசிப்பதை விட்டுவிட்டு வன்முறையில் இறங்குவது சரியா என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது

Leave a Reply