அன்புச்செழியன் இன்னும் பிடிபடாதது ஏன்? புதிய தகவல்
கடந்த சில நாட்களாக சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலைக்கு காரணமானவர் என்று கூறப்படும் அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர முயற்சிகள் செய்து கொண்டிருக்கும் நிலையில் அவர் இன்னும் பிடிபடாமல் இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்திஅ அளித்துள்ள்து. தனிப்படை போலிசார் பெங்களூர், ஐதராபாத் உள்பட பல நகரங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை என்பதால் அவர் எங்கிருக்கின்றார் என்பது மர்மமாக உள்ளது
இந்த நிலையில் அன்புச்செழியனை பிடிக்க முடியாமல் தனிப்படை போலீசார் சென்னை திரும்பிவிட்டதாகவும், அவரை பிடிக்க அடுத்தகட்ட வியூகத்தை அமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
திறமையான அதிகாரிகள் இருக்கும் தமிழக காவல்துறை அன்புச்செழியனை பிடிக்க முடியவில்லை என்று கூறுவதை நம்ப முடியவில்லை என்று சமூக வலைத்தளங்களில் பலர் கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் அன்புச்செழியன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.