shadow

அனுமதியின்றி கர்ப்பமானால் தண்டனை: ஊழியர்களை மிரட்டும் சீன வங்கி நிர்வாகம்

சீனாவில் இயங்கி வரும் பிரபல வங்கியின் நிர்வாகம் தங்களது வங்கியில் பணிபுரியும் பெண்களை தங்களுடைய அனுமதியின்றி கர்ப்பம் ஆகக்கூடாது என்றும், அவ்வாறு கர்ப்பமானால் அவர்களுக்கு கருக்கலைப்பு தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் ஒரு விண்ணப்பம் வழங்கப்படும் என்றும், அந்த விண்ணப்பத்தில் தான் இந்த ஆண்டு கர்ப்பமாக விரும்புவதாக இருந்தால் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவ்வாறு தெரியப்படுத்தாமல் திடீரென கர்ப்பமானால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

இவ்வாறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் அந்த வங்கிக்கு எதிராக தற்போது ஊழியர்கள் குரல் கொடுக்க உள்ளார்களாம்

Leave a Reply