அனிதா குடும்பத்திற்காக எதையும் செய்ய தயார்: விஜய் வாக்குறுதி
12ஆம் வகுப்பு தேர்வில் 1176 மதிப்பெண்கள் எடுத்தும் மருத்துவம் படிக்க முடியாத காரணத்தால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் இல்லத்திற்கு பல திரையுலக பிரமுகர்களும் அரசியல்வாதிகளும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தது போல் இளையதளபதி விஜய்யும் இரங்கல் தெரிவித்தார் என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் அனிதாவின் தந்தை மற்றும் சகோதரர்களுக்கு ஆறுதல் கூறிய விஜய், அனிதாவின் குடும்பத்தினர்களுக்கு உதவும் வகையில் நிதி மற்றும் பிற உதவிகளை எப்போது வேண்டுமானாலும் செய்து தர தான் தயாராக இருப்பதாகவும், தன்னை எப்போது வேண்டுமானாலும் அணுகி எந்தவித தயக்கமும் இன்றி உதவி கேட்கலாம் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.
அதுமட்டுமின்றி ஒரு லட்ச ரூபாம் நிதியுதவியும் விஜய் செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விஜய்யின் இரக்க குணம் மற்றும் மனிதாபிமானத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.