shadow

அந்த பெண் என் சகோதரை போன்றவர்: சித்தராமையா விளக்கம்

மைசூரில் நேற்று நடைபெற்ற பொதுநிகழ்ச்சி ஒன்றில் பெண் ஒருவர் எழுப்பிய கேள்வியால் ஆத்திரமடைந்த முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா மைக்கை அவரிடம் இருந்து மைக்கை பறித்ததாகவும் அப்போது அந்தப் பெண் அணிந்திருந்த துப்பட்டாவும் கையோடு வந்து பெரிய சர்ச்சையை கிளப்பியதாகவும் செய்திகள் வெளிவந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த சித்தராமையா, சம்மந்தப்பட்ட பெண்ணை தனக்கு 15 ஆண்டுகளாக தெரியும் என்றும், தனக்கு அப்பெண் சகோதிரி போன்றவர் என்றும், அப்பெண் நீண்ட நேரம் பேசியதால் கோபமடைந்து விட்டதாகவும் விளக்கம் தெரிவித்தார்.

மேலும், சித்தாரமையா கோபமாக பேசியது தொடர்பாக வீடியோவில் இருந்த பெண் ஜமாலா என்று தெரியவந்துள்ளது. அவருடம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் தான் கேள்வி கேட்ட போது மேஜையை தட்டியதாகவும் அதனால் சித்தராமையா கோபமடைந்து, மைக்கை பறித்ததாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply