அத்தி வரதரதை தரிசித்தார் முக ஸ்டாலின் மனைவி துர்கா

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு காட்சி தரும் காஞ்சி வரதராஜபெருமாள் கோவிலின் அத்தி வரதரை சந்திக்க தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கொண்டிருந்தனர்.

கடந்த 1979ஆம் ஆண்டிற்கு பின்னர் தற்போது பக்தர்களுக்கு காட்சி தரும் அத்தி வரதரை தரிசிக்க பிரபலங்களும் ஆர்வத்துடன் வருகை தருகின்றனர்.

அந்த வகையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசனம் செய்தார்

Leave a Reply