அதிமுக வெற்றி பெறும் என காசிக்கு சென்று வந்த சிவனடியார் கூறினார்: செல்லூர் ராஜூ

தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று மதுரை ஆதினத்தை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நான் மதுரை ஆதினத்தை பார்க்க சென்றிருந்தபோது அங்கு காசிக்கு சென்று வந்த சிவனடியார் ஒருவரும் இருந்தார். அவர் என்னை பார்த்து ‘அம்மா இருந்தபோது பெற்ற வெற்றியை அதிமுக மீண்டும் பெறும் என்றும், மதுரையில் அதிமுக வெற்றி பெறும் என்றும் கூறினார்

சிவனடியார் ஆசி கிடைத்துவிட்டதால் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்

Leave a Reply