shadow

அதிமுக வெற்றியை தடுப்பது எங்கள் நோக்கமல்ல! தினகரன் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி

தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த 20 தொகுதிகளில் வெற்றி பெறுவது குறித்த ஆலோசனை கூட்டத்தை நேற்று அதிமுக நடத்தியது. இந்த தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அதிமுக ஆட்சி நீடிக்கும் நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமமுகவின் இலக்கு 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதா? அதிமுகவை 8 தொகுதிகளில் வெற்றியடையாமல் தடுப்பதா…? என்ற கேள்விக்கு தினகரன் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி பதில் கூறியதாவது:

நாங்கள் தடுக்க வேண்டிய அவசியமே இல்லை தமிழக மக்கள் என்றைக்கும் துரோகத்திற்கு துணை போகுபவர்கள் அல்ல. சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது எதிர்த்து வாக்களித்தவருக்கு துணை முதல்வர் பதவி கொடுத்து, அம்மாவின் ஆட்சிக்கு எதிரான ஒரு ஆட்சியை நடத்தி வரும் இந்த அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார்

 

Leave a Reply