அதிமுக தேர்தல் அறிக்கை அறிக்கை: ஓபிஎஸ்-ஈபிஎஸ்சிடம் சமர்ப்பிக்கப்பட்டது

அதிமுக கூட்டணியில் தேமுதிக வருமா? வராதா? என்பது குறித்த கவலை இல்லாமல் அதிமுக கூட்டணியினர் தேர்தல் பணியை தொடங்கிவிட்டனர். கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்த நிலையில் அடுத்த கட்டமாக எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதி ஒதுக்குவது என்பது குறித்த ஆலோசனையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை தயாராகி அந்த அறிக்கை சற்றுமுன் ஓபிஎஸ்-ஈபிஎஸ்சிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இன்னும் ஒருசில நாட்களில் இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என தெரிகிறது

மக்களவை தேர்தலோடு 21 சட்டமன்ற தேர்தலும் முக்கியம் என்பதால் அதிமுக தேர்தல் அறிக்கையில் சலுகைகள் வாரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

 

Leave a Reply