அதிமுக, திமுக, மநீக: யாருக்கு வியூகம் அமைக்க போகிறார் பிரசாந்த் கிஷோர்?

தேர்தல் வியூகங்களை அமைத்து கொடுப்பதில் வல்லவரான பிரசாந்த் கிஷோர் பிரதமர் மோடி உள்பட பல பலருக்கு அரசியல் ரீதியாக உதவி செய்துள்ளார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வைக்க பிரசாந்த் குழு நியமனம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. சமீபத்தில் அவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன

அதுமட்டுமன்றி கமல்ஹாசனையும் அவர் சந்தித்ததாகவும் மக்கள் நீதி மய்யம் சார்பாக அவர் ஆலோசகராக செயல்பட இருப்பதாகவும் கூறப்பட்டது

மேலும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மருமகன் சபரீசன் அவர்களுக்கும் பிரசாந்த் கிஷோர் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது

எனவே வரும் மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய மூன்று கட்சிகளில் எந்த கட்சிக்கு அவர் வியூகங்களை அமைப்பார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரசாந்த், ‘நான் நிறைய பேர்களை சந்தித்து பேசுகிறேன். அதனால் அவர்களுக்கு நான் வியூகங்களை அமைத்து தர போகிறேன் என்பது உண்மை அல்ல இதுவரை தமிழகத்தில் உள்ள எந்தக் கட்சிக்கும் நான் வியூகம் அமைத்துக் கொடுப்பதாக ஒப்புக் கொள்ளவில்லை. இனிமேல் தான் எந்த கட்சிக்கு நான் வேலை செய்யப்போகிறேன் என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply