shadow

அதிமுக எம்.எல்.ஏ ஈஸ்வரன் திருமணம் செய்யவிருந்த மணமகள் கண்டுபிடிப்பு

பவானிசாகர் அதிமுக எம்எல்ஏ திருமணம் செய்யவிருந்த சந்தியா என்ற 23 வயது பெண் கடந்த 1ஆம் தேதி திடீரென மாயமான நிலையில் தற்போது திருச்சியில் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சந்தியாவை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தியபோது, நீதிபதியிடம் சந்தியா உருக்கமாக கூறியதாவது “இந்த கல்யாணம் எனக்கு பிடிக்கவில்லை. மாப்பிள்ளைக்கும் எனக்கும் வயசு வித்தியாசம் அதிகமாக இருக்கு. எனக்கும் எம்.எல்.ஏ., ஈஸ்வரனுக்கும் 20 வயது வித்தியாசம் உள்ளது. என் தந்தை வயது உள்ளவரை நான் எப்படி திருமணம் செய்வேன்? அதனால் வேறு வழியில்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினேன். இந்த கல்யாணம் வேண்டவே வேண்டாம் என்று வீட்டில் சொன்னேன். ஆனாலும் கட்டாயப்படுத்திதான் ஏற்பாடுகள் செய்தார்கள்” என்று கூறினார்.

பின்னர் இதுகுறித்து மேலும் விசாரணை செய்த நீதிபதி, சந்தியாவை பெற்றோருடன் செல்லுமாறு அறிவுறுத்தியதுடன், பெற்றோர், சந்தியாவை திருமண விஷயத்தில் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் எச்சரித்தார்.

Leave a Reply