shadow

அதிமுகவை அழிக்க வேறு யாரும் தேவையில்லை, அவர்களே போதும்: பொன்.ராதாகிருஷ்ணன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் பாஜகவின் தயவால் அதிமுகவின் ஆட்சி தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் தற்போது பாஜக, அதிமுக எதிர்ப்பு அரசியலை ஆரம்பித்துள்ளது.

குறிப்பாக பிரதமர் மோடி சென்னை வந்திருந்தபோது கருணாநிதியை சந்தித்த பின்னர் தமிழக பாஜக தலைவர்கள் அதிமுக ஆட்சி குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று நாகர்கோவிலில் பேட்டி அளித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘அதிமுகவை வேறு யாராலும் அழிக்க முடியாது என்றும், அந்த கட்சியை அக்கட்சியினர்களே அழித்துவிடுவார்கள் என்றும் கூறினார். மேலும் ஊழல் செய்ய பாஜக தூண்டியதும் இல்லை, ஊழல் செய்தவர்களை தண்டிக்காமல் விட்டதுமில்லை என்று கூறிய பொன்.ராதாகிருஷ்ணன், தவறு செய்பவர்கள் யாரும் தப்ப முடியாது என்று திட்டவட்டமாக கூறினார்.

மேலும் தமிழகத்தை இதுவரை ஆட்சி செய்தவர்கள் சரியாக திட்டமிடாதது தான், மழை பாதிப்பு ஏற்படுவதற்கு காரணம் என்று கூறியதோடு அதிகளவில் மதுக்கடைகள் திறப்பது, அரசே மக்களை பலி கொடுப்பதற்கு சமம்’ என்று கடுமையாக விமர்சனம் செய்தார்

Leave a Reply