அதிமுகவில் இருந்து அமமுகவுக்கு தாவும் இன்னொரு எம்.எல்.ஏ?
தமிழகத்தில் நடைபெற்றுள்ள 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலின் முடிவுகளை பொறுத்தே அதிமுக அரசு நீடிக்கும் என்ற நிலையில் திடீரென பெருந்துறை தொகுதியின் எம்.எல்.ஏ மற்றும் அம்மா பேரவை மாநில இணைச் செயலாளராக உள்ள தோப்பு வெங்கடாசலம் கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மேலும் இவர் அதிமுகவில் இருந்தும் விரைவில் விலகுவார் என்றும், தினகரனின் அமமுகவில் இணைய வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் வெளிவர இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அதிமுக எம்.எல்.ஏ ஒருவர் எதிர்முகாமை நோக்கி செல்வதால் அதிமுக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.