அதிமுகவால் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்: புதிய தகவல்
நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் வெற்றி பெற்றதாக சற்று முன் அறிவிக்கப்பட்டது
பாஜக வேட்பாளர் ஹரிவன்ஷ் 125 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் ஹரிபிரசாத் 105 வாக்குகளும் பெற்றனர். இதனால் ஹரிவன்ஷ் 20 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதிமுக எம்.பிக்கள் 13 பேரும் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பதும் அதிமுக வேட்பாளர்கள் மாற்றி வாக்களித்திருந்தால் பாஜக வேட்பாளர் தோல்வி அடைந்திருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. .
மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஹரிவன்ஷ் நாராயண் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.