அண்ணன் மகள் தமிழிசையை கலாயத்த வசந்தகுமார்
காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நாகர்கோவில் தொகுதியி வசந்தகுமாரும், அவருடைய அண்ணன் மகள் தமிழிசை பாஜக வேட்பாளராக தூத்துகுடியிலும் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் வசந்தகுமாரை, அவரை எதிர்த்து போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன், வெளிநாட்டுப் பறவை என்று விமர்சித்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் வசந்தகுமார் பேசும்போது, நான் வெளிநாட்டுப் பறவை என்றால், தூத்துக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன் எந்த நாட்டுப் பறவை என்று பொன்னார் பதில் சொல்வாரா என்று கேட்டுள்ளார். தமிழிசை சவுந்தரராஜனின் சொந்த அண்ணனின் மகளாக இருந்து எச்.வசந்தகுமார் அவரை கலாய்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.