அண்டர் 19 உலகக்கோப்பை: அரையிறுதியில் இந்தியா-பாகிஸ்தான்

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் ஏ பிரிவில் இருக்கும் இந்தியா ஏற்கனவே நடைபெற்ற மூன்று லீக் போட்டிகள் மற்றும் கால் இறுதி போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது

இந்த நிலையில் நேற்று நடந்த காலிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதனை அடுத்து இந்தியா-பாகிஸ்தான் அணிகள் அரையிறுதியில் மோதவிருப்பதாகவும், இந்த போட்டி பிப்ரவரி 4ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்திய சீனியர் அணி பாகிஸ்தான் அணியுடன் மோதும் போட்டி போல் இந்த அரையிறுதி போட்டியும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply