அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை மைய இயக்குநர்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக பெய்து வந்த நிலையில் நேற்று மாலைமுதல் படிப்படியாக மழை குறையும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் இன்று காலை சென்னை உள்பட பல பகுதிகளில் நல்ல வெயில் அடித்தது
இந்த நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைபெய்ய வாய்ப்பு என வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மத்திய மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் இந்த மழை பெய்வதற்கு காரணமாக அமைகிறது என்று அவர் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.