அதிர்ச்சி தகவல்

17 வயது இளம்பெண் ஒருவர் 3 வாலிபர்களை ஒரே நேரத்தில் காதலித்து வந்ததாகவும் அவர்கள் மூவரையும் அடுத்தடுத்த நாட்களில் திருமணம் செய்து கொண்டதாகவும் வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவர் தான் படிக்கும் பள்ளியில் ஒருவரையும் தனது வீட்டின் அருகில் உள்ள ஒருவரையும் தான் டியூசன் படிக்க செல்லும் இடத்தில் உள்ள ஒருவரையும் என ஒரே நேரத்தில் மூவரை காதலித்துள்ளார்

ஒரே நேரத்தில் மூன்று காதலையும் செய்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் மூவருமே அவரை திருமணம் செய்ய நெருக்கி உள்ளதாக தெரிகிறது

இதனை அடுத்து அடுத்தடுத்த நாட்களில் திருமண தேதியை குறித்த அவர் மூன்று நாட்களில் மூன்று முறை ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருடன் திருமணம் செய்துள்ளார்

இந்த தகவல் ஒரு சில நாட்களில் மூவருக்கும் தெரிந்த நிலையில் தற்போது மூவரில் இருவர் விட்டுக்கொடுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply