அடுக்குமாடி குடியிருப்பின் மீது சரிந்து விழுந்த கிரேன்: ஒருவர் பலி


அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டலாஸ் நகரில் பலத்த காற்றின் காரணமாக கிரேன் ஒன்று அடுக்குமாடி குடியிருப்பின் மீது விழுந்ததால் ஒருவர் பலியானார்.

டலாஸ் நகரில் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் இருந்த கிரேன் ஒன்று பலத்த சூறாவளி காற்றினால் குடியிருப்பு கட்டடத்தின் மீது சாய்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் அந்த குடியிருப்பில் இருந்து ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கிரேன் அந்த குடியிருப்பின் வாகனம் நிறுத்தும் பகுதியில் விழுந்துள்ளதால் பல கார்கள் நசுங்கி உள்ளன.

Leave a Reply