அஞ்சல் துறை விவகாரம்: சட்டசபையில் திமுக வெளிநடப்பு
அஞ்சல் துறை தேர்வுகளில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் கேள்வித்தாள்கள் இனிமேல் வழங்கப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த அறிவிப்பால் அஞ்சல் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
இந்த அறிவிப்புக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் நேற்று அஞ்சல் துறை தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கேள்வித்தாள்கள் இருந்ததால் கேள்விகளை புரிந்து கொள்ள கடினமாக இருப்பதாக தெரிவித்தனர்
இந்த நிலையில் இந்த விவகாரம் இன்று சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. அஞ்சல்துறை தேர்வை தமிழில் எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சட்டசபையில் வலியுறுத்தியது. இதனை அடுத்து அஞ்சல்துறை விவகாரம் குறித்து அரசின் பதில் திருப்தி இல்லாததால் திமுக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது
Leave a Reply
You must be logged in to post a comment.