அஜீத்துக்கு விட்டு கொடுத்தாரா ராகவா லாரன்ஸ்?
அஜீத் நடித்து வரும் படத்திற்கு ‘வேதாளம்’ என்ற தலைப்பு நேற்றிரவு வெளியாகி ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் வேதாளம்’ டைட்டிலை இயக்குனர்-நடிகர் ராகவா லாரன்ஸ் அஜீத்துக்காக விட்டுக்கொடுத்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
காஞ்சனா 2 வெற்றிப் படத்தை அடுத்து ராகவா லாரன்ஸ் நடிக்கவிருந்த புதிய படத்திற்காக ‘வேதாளம்’ என்ற டைட்டிலை அவர் ரிஜிஸ்தர் செய்திருந்ததாகவும், இந்த படத்தை சூரி என்ற அறிமுக இயக்குனர் எழுதி இயக்குவதாகவும் இருந்ததாம்.
ஆனால் அதற்கு முன்பாக வேந்தர்மூவிஸ் நிறுவனம் கேட்டு கொண்டதற்கு இணங்க அந்நிறுவனத்திற்காக இரண்டுபடங்களை இயக்கி நடிக்க ராகவா லாரன்ஸ் முடிவு செய்ததால், ‘வேதாளம்’ படத்தை தள்ளி வைத்ததாகவும், தற்போது அஜீத் படக்குழுவினர் ‘வேதாளம்’ டைட்டிலை கேட்டபோது எந்த மறுப்பும் இன்றி, ஒரு பைசாகூட வாங்காமல் உடனடியாக ‘வேதாளம்’ டைட்டிலை விட்டுக் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.