அஜித்தை நான் தான் அறிமுகம் செய்தேன்: எஸ்.பி.பாலசுபிரமணியம்
அஜித் ரசிகர்கள் பெருமையாக சொல்லிக்கொள்ளும் ஒரு விஷயம், அஜித் யாருடைய உதவியும் இன்றி தானாக உழைப்பால் முன்னேறியவர் என்பதுதான். ஆனால் நேற்று விஜய் டிவியில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எஸ்பி பாலசுப்பிரமணியம், ‘அஜித்தை நான் தான் ஒரு தயாரிப்பாளரிடம் அறிமுகம் செய்து வைத்தேன்’ என்று கூறினார்.
மேலும் தன்னுடைய மகன் எஸ்பிபி சரணும் அஜித்தும் ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் என்றும், அஜித் விளம்பர படத்திற்கு நடிக்க செல்லும்போது செண்டிமெண்ட்டாக சரணின் சட்டை மற்றும் ஷூவை அணிந்து செல்வார் என்றும் எஸ்பிபி கூறினார்
அஜித் இன்று இருக்கும் உயரத்திற்கு அவருக்கு எப்போதோ உதவி செய்ததை சொல்லி எஸ்பிபி மலிவான விளம்பரம் தேடிக்கொள்வதாக அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.