shadow

அஜித்தையும் கந்துவட்டிக்காரர்கள் மிரட்டினர்: சுசீந்திரன் அதிர்ச்சி தகவல்

சசிகுமாரின் உறவினர் அசோக்குமாரின் தற்கொலை திரையுலகினர்களை அதிர்ச்சி அடைய செய்தது மட்டுமின்றி இனியும் இதுபோன்ற ஒரு மரணம் நிகழாவண்ணம் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் யோசிக்க வைத்துள்ளது. இந்த நிலையில் அஜித்தும் ஒரு காலத்தில் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டு மிரட்டலுக்கு ஆளானவர் என்று இயக்குனர் சுசீந்திரன் கூறியுள்ளார்.

இன்று இயக்குனர் சுசீந்திரன் அசோக்குமாரின் உடலுக்கு இறுதியஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட அசோக்குமாரின் மரணமே கடைசியாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் நடிகர் அஜித் உள்பட பலரும் கந்து வட்டி கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். அஜித் ரசிகர்களுக்கு நான் ஒரு அதிர்ச்சியான விஷயத்தை சொல்ல போகிறேன். ‘நான் கடவுள்’ படத்தின் சமயத்தில் அஜித் அவர்களே இந்த சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.ஒரு முதல்வர் இருக்கும் மேடையிலேயே தன்னை வலுக்கட்டாயமாக அழைத்து வந்தனர் என்று தைரியமாக கூறிய அஜித் இதனையும் மறுக்க மாட்டார்.. இயக்குனர் லிங்குசாமி உள்பட பலர் இந்த கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தனிப்பட்டை முறையில் விசாரித்தால் பலர் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவரும்’ என்று கூறினார்.

 

Leave a Reply