அங்கீகாரம் இல்லாத கல்லூரிகளுக்கு சரியான ஆப்பு வைத்த மத்திய அரசு

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கல்லூரிகளும் நாக் அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்க பல்கலைக்கழக மானியக்குழு முடிவு செய்துள்ளது. உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மேற்கொண்டு வருகிறது.

தற்போது நாடு முழுவதும் பெரும்பாலான கல்லூரிகள் நாக் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் நிலையில் அனைத்து கல்லூரிகளும் நாக்அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து புதிய திருத்தப்பட்ட வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

அந்த நெறிமுறையில் அனைத்து கல்லூரிகளும் நாக் அங்கீகாரம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், நிரந்தர இணைப்பு மட்டுமில்லாமல் தற்காலிக இணைப்பு பெற்று இயங்கும் கல்லூரிகளும் யுஜிசி வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றி செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆய்வின்போது குறைகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது மாணவர்கள் சேர்க்கைக்கு தடை உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply