அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலில் நடைபெறாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும் நிலையில் இது குறித்த வழக்கு ஒன்றூ உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது

இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் வந்தபோது அக்டோபருக்குள் வார்டு மறுசீரமைப்புக்களை முடித்துவிடுவதாக மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும், மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதத்தை ஏற்று அக்டோபரில் தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இதனை அடுத்து வரும் அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply