ஃபனி புயல் எந்த பகுதியில் கடக்கும்? வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த மண்டலமாக மாறி புயலாக வலுப்பெறும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் ஃபனி புயல் ஏப்ரல் 30ம் தேதி மாலை கடலூர் மற்றும் வேதாரண்யம் இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும், புயல் கரையை கடக்கும் போது 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதில் இருந்து சென்னைக்கு புயல் ஆபத்து இல்லை என்றும் மீண்டும் கடலூர் பகுதி புயலில் சிக்கும் என்றும் தெரிகிறது

Leave a Reply