பிரபல தொழிலதிபர் வருண்மணியன் மற்றும் த்ரிஷா நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரி 23ஆம் தேதி மிக சிறப்பாக நடந்தது. இந்த வருட இறுதியில் இவர்களது திருமணம் நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்க்கும் நிலையில் தற்போது இந்த திருமணமே நடைபெறுமா? என்ற சந்தேகம் வலுத்துள்ளதாக கோலிவுட்டில் செய்திகள் கூறிவருகின்றன.
ஏற்கனவே ராணாவுடன் பிரேக் ஆகிய த்ரிஷா, வருண்மணியனுடன் தன்னுடைய புதிய வாழ்க்கையை தொடங்குவார் என்று அனைவரும் எதிர்பார்க்கும் நிலையில் தற்போது வருண்மணியனுக்கு த்ரிஷாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்து வருகின்றன.
ஆனால் இந்த செய்தி இருவரது தரப்பில் இருந்து உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் வருண்மணியனின் குடும்ப நிகழ்ச்சி ஒன்றுக்கு த்ரிஷா கலந்து கொள்ளாமல் இருந்தது, வருண்மணியன் தயாரிக்கும் திரைப்படம் ஒன்றில் இருந்து த்ரிஷா விலகியது ஆகியவற்றை வைத்து ஒருசில ஊடகங்கள் இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
த்ரிஷா மற்றும் வருண்மணியன் ஆகிய இருவருமே இதுவரை இந்த செய்தியை மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருவரின் தரப்பில் இருந்து ஏதாவது தகவல் வந்தால் மட்டுமே இந்த செய்தி உண்மையா? இல்லையா என்பது தெரியவரும்
Leave a Reply
You must be logged in to post a comment.