ஹெச்.ஆர். வேலைக்கு இண்டர்வியூ சென்ற இளம்பெண் விடிய விடிய பாலியல் பலாத்காரம்

மும்பையில் ஹெச்.ஆர். வேலைக்கு இண்டர்வியூ சென்ற இளம்பெண் ஒருவர் விடிய விடிய பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஹெச்.ஆர். வேலைக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். அவருக்கு மொபைல் போனில் நேர்காணல் குறித்த அழைப்பு வந்தது. மும்பையில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஹோட்டல் பெயரை கூறி அந்த ஓட்டலுக்கு தகுந்த ஆவணங்களுடன் நேர்காணலுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டது

இதனை அடுத்து வேலைக்கான நேர்காணலுக்காக அந்த பெண் குறிப்பிட்ட அந்த ஓட்டல் அறைக்குச் சென்றபோது நேர்காணல் செய்யும் அதிகாரி திடீரென கதவை மூடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். விடிய விடிய பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திய அந்த நபர் பின்னர் அதிகாலையில் இந்த விஷயத்தை வெளியே கூறினால் இது குறித்த வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டி அனுப்பி உள்ளார்

ஆனால் அந்த பெண் நேரடியாக மும்பை காவல் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் விரைந்து வந்து அந்த நபரை கைது செய்தனர். அவர் மீது இந்திய பீனல் கோடு 376 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Leave a Reply